நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 7.37% உயர்வு

December 30, 2022

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 7.37% உயர்ந்து, 126.97 லட்சம் டன்களாக பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய நிதியாண்டில், 118.25 லட்சம் டன்கள் மட்டுமே அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பாண்டில், குறிப்பிட்ட வகை அரிசி ஏற்றுமதிக்கு தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த விவரங்களை அனைத்திந்திய ஏற்றுமதியாளர்கள் அசோசியேஷனின் முன்னாள் தலைவர் விஜய் சேதியா தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சவுதி அரேபியாவுக்கு பாசுமதி அரிசியும், […]

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 7.37% உயர்ந்து, 126.97 லட்சம் டன்களாக பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய நிதியாண்டில், 118.25 லட்சம் டன்கள் மட்டுமே அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பாண்டில், குறிப்பிட்ட வகை அரிசி ஏற்றுமதிக்கு தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த விவரங்களை அனைத்திந்திய ஏற்றுமதியாளர்கள் அசோசியேஷனின் முன்னாள் தலைவர் விஜய் சேதியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சவுதி அரேபியாவுக்கு பாசுமதி அரிசியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இதர வகை அரிசியும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், பாசுமதி அரிசி ஏற்றுமதி 24.97 லட்சம் டன்களாகவும், பாசுமதி அல்லாத இதர வகை அரிசி ஏற்றுமதி 102 லட்சம் டன்களாகவும் உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் குருணை அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால், இந்த தடையால், இதர அரிசி ஏற்றுமதி பாதிப்படையவில்லை என்பதை இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu