கோதையாற்றில் நீர் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் அணை பிப்ரவரி இறுதியில் மூடப்படும். ஆனால் விவசாயிகள் அறுவடை ஆகவில்லை மேலும் கூடுதலாக இரண்டு வாரங்கள் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் ஒரு வாரம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையிலிருந்து 1000 கன அடி நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோதை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் அங்கு உள்ள திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதைத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.