பெலாரஸ் நாட்டிற்கு ஜூலை மாதத்திற்குள் அணு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன் புதின் ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் என புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.