புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் முதல் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் 11-வது புரோ கபடி லீக் போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் - உபி யோதா அணிகள் மோதின. தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் சிறப்பாக ஆட்டத்தில் ஈடுபட்டன. இறுதியில், 32-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது. மேலும், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-25 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.