பூமியின் பகுதிக்கு நேர் உச்சியில் சூரியன் வருகையில், அந்தப் பகுதியில் நிழல்கள் தென்படுவதில்லை. இத்தகைய நிகழ்வு ஏற்படும் நாள் ‘நிழல் இல்லா தினம்’ என்று அழைக்கப்படுகிறது. பூமி, சாய்ந்த கோணத்தில் சூரியனை சுற்றி வலம் வருகையில், மிகவும் அரிதாக ‘நிழல் இல்லா தினம்’ நிகழ்வு ஏற்படுகிறது. அந்த வகையில், பெங்களூருவில் இன்று நிழல் இல்லா தினம் நடைபெறுகிறது.
இன்று மதியம் 12:24 மணி அளவில், பெங்களூரு வாழ் மக்கள், நிழல் இல்லாத தினத்தை உணர முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, இதே போன்ற நிழல் இல்லா தினம் பெங்களூருவில் ஏற்பட்டது. அதன் பின்னர், இன்று நிகழ்கிறது. ஒரே ஆண்டில் இரு முறை நிகழும் இந்த அரிய வானியல் நிகழ்வை, பலரும் சமூக வலைதளங்களில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்து வருகின்றனர்.