தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சிறந்த ஏற்றுமதியாளர் விருது பெற்று வருகிறது.டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் அதன் திறமைக்கு சான்றாக 2017-18, 2018-19, 2019-2020, மற்றும் 2021 -2022 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஏற்றுமதியாளர் விருதினை கேப்எக்சில் அமைப்பிடமிருந்து பெற்றுள்ளது. ஏற்றுமதிக்கான சிறப்பு விருதை 2020-2021 ஆம் ஆண்டு பெற்றது.
இந்த நிறுவனத்திற்கு 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூபாய் 730.85 கோடி அளவிற்கு அதிகபட்ச ஏற்றுமதி வருவாயை பெற்றுள்ளது, மேலும் ரூபாய் 5106.69 கோடி விற்று முதலையும் எட்டியுள்ளது. இதனால் இந்த நிறுவனத்திற்கு ஏற்றுமதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக ஏற்றுமதியாளர் விருது அங்கீகாரம் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம்