துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பார்க்கருக்கு பிபிசி விருது அறிவிப்பு

February 18, 2025

பிபிசி நிறுவனம் வழங்கும் ‘சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை’ விருதை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் கைப்பற்றியுள்ளார். கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், பாரா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோரும் இறுதி போட்டியில் இடம் பிடித்த நிலையில், மனு பாக்கர் வெற்றி பெற்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்று, ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் பெற்ற முதல் […]

பிபிசி நிறுவனம் வழங்கும் ‘சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை’ விருதை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் கைப்பற்றியுள்ளார். கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், பாரா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோரும் இறுதி போட்டியில் இடம் பிடித்த நிலையில், மனு பாக்கர் வெற்றி பெற்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்று, ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் பெற்ற முதல் இந்தியா் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இளம் வயதில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மனு பாக்கர், 2018-ல் இந்த சாதனையை 16 வயதிலேயே முடித்தார். இவர் 2021-ல் பிபிசியின் வளர்ந்து வரும் வீராங்கனை விருதையும் பெற்றுள்ளார். இம்முறை, பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி (வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனை), முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் (வாழ்நாள் சாதனை விருது), பாரா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா (சிறந்த பாரா வீராங்கனை விருது), செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் (மாற்றத்துக்கான விருது) ஆகியோரும் விருது பெற்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu