தமிழகத்தில் பாரத் கேஸ் விநியோகம் பாதிப்பு

April 18, 2024

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் சமையல் கேஸ் விநியோகத்தில் மத்திய அரசின் ஐஓசி, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்களை ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையே வாடகை நிர்ணயம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து சிலிண்டர்களை ஏற்றி இருக்கும் பணியில் ஈடுபடும் […]

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் சமையல் கேஸ் விநியோகத்தில் மத்திய அரசின் ஐஓசி, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்களை ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையே வாடகை நிர்ணயம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து சிலிண்டர்களை ஏற்றி இருக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வலியுறுத்தினார்கள். இதில் கடந்த ஐந்தாண்டுகளாக லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை உயர்த்தி தராமல் வந்ததால் கடந்த 16ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் யூனிட்டில் தொடங்கிய இந்த பிரச்சனை தற்போது கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் லாரி ஸ்ட்ரைக் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் ஐந்து இடங்களில் இருந்து பாரத் சமையல் காஸ் லாரிகள் விநியோகஸ்தர்களுக்கு கொண்டு செல்லவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் பாரத் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu