மத்திய அரசு பாரத் அரிசி என்ற திட்டத்தை தொடங்க உள்ளது. அதன்படி, ஒரு கிலோ அரிசி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்தியாவில், பணவீக்க விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, உணவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில், அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை, மத்திய அரசு மானிய விலையில் விற்பனை செய்ய தொடங்கியது. இதற்கு முன், கோதுமை மாவு, பருப்பு போன்றவை பாரத் என்ற பெயரில் மானிய விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது அரிசி விற்பனை தொடங்கப்பட உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசால் இயக்கப்படும் வேளாண் அமைப்புகள் ஆகியவை, பாரத் அரிசி விற்பனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.