டெல்லியில் பாரத் டெக்ஸ் 2024 சர்வதேச ஜவுளி கண்காட்சியை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வர்த்தக மையத்தில் பாரத் டெக்ஸ் 2024 ஜவுளி கண்காட்சி இன்று தொடங்கி மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள ஜவுளி துறையினர் தங்கள் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துகின்றன. அதில் பஞ்சு முதல் ஆடைகள் வரை அனைத்து உற்பத்தி நிலை நிறுவனங்களும் தங்கள் பொருளை காட்சிப்படுத்த இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதில் திருப்பூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.