வாரணாசியில் பாரதியார் இல்லம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

December 12, 2022

வாரணாசியில் தமிழக அரசு சார்பில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று திறந்து வைத்தார். மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தாய்மொழி தமிழை தெய்வமாக போற்றியவர் பாரதியார். அன்னாரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் -  பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10-9-2021 அன்று பாரதியின் நினைவு நாள் "மகாகவி நாள்" ஆக கடைப்பிடிக்கப்படும், "பாரதி இளங்கவிஞர் விருது" வழங்கப்படும் . வாரணாசியில் அவர் வாழ்ந்த […]

வாரணாசியில் தமிழக அரசு சார்பில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று திறந்து வைத்தார்.

மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தாய்மொழி தமிழை தெய்வமாக போற்றியவர் பாரதியார். அன்னாரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் -  பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10-9-2021 அன்று பாரதியின் நினைவு நாள் "மகாகவி நாள்" ஆக கடைப்பிடிக்கப்படும், "பாரதி இளங்கவிஞர் விருது" வழங்கப்படும் . வாரணாசியில் அவர் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம்,வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, வீட்டின் உரிமையாளருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வீட்டின் ஒரு பகுதி ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, அதில் பாரதியாரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக நேற்று திறந்து வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu