அதானி பவர் நிறுவனத்தின் 3500 கோடி ரூபாய் ஆர்டர் பெற்ற பெல் நிறுவனம்

June 6, 2024

இந்திய அரசுக்குச் சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு, அதானி பவர் நிறுவனத்திடம் இருந்து 3500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் (ஜிஎஸ்டியை தவிர்த்து) கிடைத்துள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக இந்த ஆர்டர் கையெழுத்தாகி உள்ளது. கடந்த ஜூன் 5ஆம் தேதி, பெல் மற்றும் அதானி பவர் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை பெல் நிறுவனம் வழங்கும். இவை, […]

இந்திய அரசுக்குச் சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு, அதானி பவர் நிறுவனத்திடம் இருந்து 3500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் (ஜிஎஸ்டியை தவிர்த்து) கிடைத்துள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக இந்த ஆர்டர் கையெழுத்தாகி உள்ளது.

கடந்த ஜூன் 5ஆம் தேதி, பெல் மற்றும் அதானி பவர் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை பெல் நிறுவனம் வழங்கும். இவை, திருச்சி மற்றும் ஹரித்வார் பகுதியில் உள்ள பெல் நிறுவனத்தின் ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். அதானி பவர் கொண்டு வரும் ஆனால் மின் நிலைய திட்டத்தில் 2 * 800 MW மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu