பூடான் பிரதமராக ஷெரிங் டாக்பே மீண்டும் தேர்வு

January 11, 2024

பூடான் பிரதமராக ஷெரிங் டாக்பே இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பூடான் பொது தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷெரிங் டாக்பே தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி அடைந்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த நவம்பர் 30ஆம் தேதி பூடான் நாடாளுமன்றத்திற்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜனவரி ஒன்பதாம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் பீடிபி கட்சி வெற்றி பெற்றுள்ளது. நேற்று தேர்தல் ஆணையம் இது குறித்து […]

பூடான் பிரதமராக ஷெரிங் டாக்பே இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பூடான் பொது தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷெரிங் டாக்பே தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி அடைந்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த நவம்பர் 30ஆம் தேதி பூடான் நாடாளுமன்றத்திற்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜனவரி ஒன்பதாம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் பீடிபி கட்சி வெற்றி பெற்றுள்ளது. நேற்று தேர்தல் ஆணையம் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டது. அதில் நாடாளுமன்றத்தின் 47 இடங்களில் 30 இடங்களை பிடிபி கட்சி கைப்பற்றியுள்ளது. பூட்டான் டென்றேல் கட்சிக்கு 17 இடங்கள் கிடைத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 24 இடங்களை போதுமானது என்ற நிலையில் ஷெரிங் டாக்பே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இவர் கடந்த 2013 முதல் 2018 வரை பூடான் பிரதமராக இருந்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu