பாராளுமன்ற தேர்தலுக்காக ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இருபதாம் தேதி தொடங்கியது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இக்கட்சி பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.