நேதன்யாகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் - ஜோ பைடன்

December 14, 2023

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.. காசாவில் போர் நிறுத்தம் முடிந்த பிறகு முழு வேகத்துடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு மற்றும் தெற்கு காசாவில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் […]

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்..

காசாவில் போர் நிறுத்தம் முடிந்த பிறகு முழு வேகத்துடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு மற்றும் தெற்கு காசாவில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில் பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். எனவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஆன ஜேக்கப் சல்லிவன் இஸ்ரேல் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார். இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பதை நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu