காசாவிற்கு வான்வழியாக அமெரிக்க நிவாரணப் பொருட்கள் அளிக்கப்படும்

March 2, 2024

காசாவில் அமெரிக்க ராணுவம் வான் வழியாக உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே அவர்களுக்கு மனிதாபிமான பொருட்கள் சென்றடையும் நிலை உள்ளது. இந்நிலையில், காசாவின் மேற்குப் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் இஸ்ரேல் ராணுவம் மக்களை நோக்கி சுட்டதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். […]

காசாவில் அமெரிக்க ராணுவம் வான் வழியாக உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே அவர்களுக்கு மனிதாபிமான பொருட்கள் சென்றடையும் நிலை உள்ளது. இந்நிலையில், காசாவின் மேற்குப் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் இஸ்ரேல் ராணுவம் மக்களை நோக்கி சுட்டதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், காசாவில் அமெரிக்க ராணுவம் வான் வழியாக உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். அதோடு உதவி செய்ய என்னென்ன வழிகள் இருக்கிறது என்பது குறித்து ஆராயப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த பணியில் ஜோர்டான் மற்றும் சில நாடுகள் அமெரிக்காவுடன் இணைய உள்ளன என்றும் அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu