அமெரிக்காவில் 2021 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவருடைய பதவி காலம் அடுத்த ஆண்டு நவம்பரில் முடிவடைகிறது. இப்பொழுது அங்கு தேர்தலுக்கான பணிகள் துவங்கியுள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில்,ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 40% மக்கள் ஜோ பைடன் ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்துள்ளதாக கூறியுள்ளனர். ஜோ பைடனின் நிர்வாகத்தை 37 சதவீதம் பேர் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளனர். சுமார் 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். அதோடு அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடக் கூடாது, அவருக்கு வயதாகி விட்டது என்று கூறியுள்ளனர். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.