அமெரிக்கா ஈரானின் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா ஈரானின் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மத்திய கிழக்காசிய பிராந்தியத்தில் நிகழும் தாக்குதல்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். மேலும், ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலிலும் அமெரிக்காவின் ஒத்துழைப்போ அல்லது ஆலோசனையோ இல்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறுகையில், "இஸ்ரேல் தற்காப்பு நோக்குடன், கடந்த 1-ம் தேதி நடைபெற்ற ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலளிக்கின்றது" எனக் குறிப்பிட்டார். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பிறகு, தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகள் சைரனை ஒலிக்க தொடங்கியுள்ளன. மேலும் நாட்டின் விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.