தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்புவுடன், பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதனால் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு, இத்தகைய வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்புவுடன் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்துகின்றனர்.