புதன்கிழமை இரவு, டெல்லி காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் பீஹாரில் தடம் புரண்டு விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 75 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே டெல்லி காமாக்யா விரைவு ரயில் தடம் புரண்டது. ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், முழு கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பயணிகளில் கவலைக்கிடமான நிலைமையில் யாரும் இல்லை என ஆறுதல் தெரிவித்துள்ளார்.