ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா கேரளாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதமும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் ஆளுநரின் அதிகாரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கூட்டணி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
குஜராத் மாநிலத்தில், துணைவேந்தர்களை நியமிப்பதில் தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. இதே முறையை ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களிலும் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படக்கூடிய மூவரில் ஒருவர் துணைவேந்தராக மாநில அரசின் ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார்.