சர்வதேச அளவில், கிரிப்டோகரன்சி துறையில், பினான்ஸ் (Binance) நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு போட்டியாக எஃப் டி எக்ஸ் (FTX) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், FTX நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு, உடனடி நிதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், FTX நிறுவனத்தை பினான்ஸ் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. இந்த தகவலை, பினான்ஸ் நிறுவனத்தின் தலைவர் CZ Zhao ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக, பினான்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாவோ மற்றும் எஃப் டி எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் சாம் பேங்க்மேன் ஆகியோருக்கு இடையில், ட்விட்டரில் காரசார விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில், எஃப் டி எக்ஸ் நிறுவனம் அதள பாதாளத்திற்கு தள்ளப்படுவதை தவிர்க்க, பினான்ஸ் நிறுவனத்துடன் இணைவதே ஒரே வழி என்று முடிவானது. அதன்படி, எஃப் டி எக்ஸ் நிறுவனர் சாம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், பினான்ஸ் நிறுவனம் எஃப் டி எக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், FTX நிறுவன வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.