ஜப்பான் - பறவை காய்ச்சல் காரணமாக 77 லட்சம் கோழிகள் அழிப்பு

ஜப்பான் நாட்டில் உள்ள 54 மாகாணங்களில் பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக, 77.5 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், பறவை காய்ச்சல் பரவிய பகுதிகளில் இருந்து, 3 கிலோமீட்டர் சுற்றளவு வரை, கோழிகள், முட்டைகள் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் ஜப்பானில் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு பதிவானது. அது வேகமாக பரவி 23 மாகாணங்களில் உள்ள பறவைகளை […]

ஜப்பான் நாட்டில் உள்ள 54 மாகாணங்களில் பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக, 77.5 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், பறவை காய்ச்சல் பரவிய பகுதிகளில் இருந்து, 3 கிலோமீட்டர் சுற்றளவு வரை, கோழிகள், முட்டைகள் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் ஜப்பானில் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு பதிவானது. அது வேகமாக பரவி 23 மாகாணங்களில் உள்ள பறவைகளை பாதித்தது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தால் 54 மாகாணங்களுக்கு காய்ச்சல் வேகமாக பரவி உள்ளது. பறவைக் காய்ச்சல் பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைகள் அழிக்கப்படுகின்றன. ஜப்பானில், அதிக எண்ணிக்கையில் பறவைகள் அழிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu