கேரள அரசின் புதிய முயற்சி – குழந்தைகளுக்கு செவ்வாய்க்கிழமை புலாவ், முட்டை பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வைரலான சிறுவன் சங்குவின் “உப்புமா வேண்டாம், பிரியாணி வேண்டும்” என்ற கோரிக்கை, கேரள அரசை சிந்திக்க வைத்தது. இதைத் தொடர்ந்து, பத்தனம்திட்டாவில் நடைபெற்ற மாநில அளவிலான அங்கன்வாடி வகுப்பு தொடக்க விழாவில் சுகாதாரத் துறை மந்திரி வீணாஜார்ஜ் புதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இனிமேல், இட்லி, சாம்பார், பால், இலையடை, கஞ்சி, பாயாசம் போன்ற பாரம்பரிய உணவுகளுடன் சேர்த்து, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முட்டை பிரியாணி அல்லது புலாவ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், உணவில் மாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.














