அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கிரிப்டோ கரன்சி உலகில் பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது. குறிப்பாக, பிட்காயின் கடந்த இரண்டு வாரங்களில் 40% உயர்ந்து $98,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.
டிரம்ப் தனது பிரச்சாரத்தின் போது கிரிப்டோ கரன்சிகளுக்கு ஆதரவாக பேசியது இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்காவை கிரிப்டோ கரன்சிகளின் உலக தலைநகராக மாற்றுவது, பிட்காயின் உறுதிப்படுத்தல் போன்ற வாக்குறுதிகளை அவர் அளித்திருந்தார். மேலும், கிரிப்டோ துறைக்கு கட்டுப்பாடுகளை விதித்து வரும் SEC தலைவரை மாற்றுவதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.