கிரிப்டோ கரன்சி சந்தையில் பிட்காயினுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக, 45000 டாலர்களைத் தாண்டி பிட்காயின் மதிப்பு பதிவாகியுள்ளது.
கிரிப்டோ கரன்சி சந்தையில், பிட்காயின் மற்றும் ஈதர் ஆகியவை முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. கடந்த ஏப்ரல் 6, 2022 க்குப் பிறகு, பிட்காயின் சந்தை 4% அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்ததாக, ஈதர் மதிப்பு 2.6% வளர்ச்சி பெற்றுள்ளது. கொரோனா பரவலுக்கு முன்னதாக, பிட்காயின் மதிப்பு 69000 டாலர்கள் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த கிரிப்டோகரன்சி சந்தை, தற்போது மீண்டு வருகிறது. அதன்படி, பிட்காயின் மதிப்பு விரைவில் 50000 டாலர்களை எட்டும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.