இலங்கையின் சர்வதேச விமான நிறுவனமான ‘பிட்ஸ் ஏர்’ என்ற தனியார் நிறுவனம், இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு முதல் விமான சேவையை நேற்று தொடங்கியது.
வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் இந்த விமான சேவை ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தினசரியாக இயக்க ‘பிட்ஸ் ஏர்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பிட்ஸ் ஏர் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அம்மார் காசிம் பேசுகையில், கொழும்பு-சென்னை இடையேயான சேவை ‘பிட்ஸ் ஏர் A320' ரக விமானத்தால் இயக்கப்படுகிறது.
’பிட்ஸ் ஏர்’ -ன் சென்னை விமான சேவை என்பது இந்நிறுவனத்தின் தற்போதைய விரிவாக்க முயற்சியின் ஒரு பகுதியாகும். மிகவும் திறமையான அனுபவம் வாய்ந்த ஊழியர்களை ’பிட்ஸ் ஏர்’ நிறுவனம் கொண்டுள்ளது. மேலும் அடுத்த காலாண்டில் 3 புதிய இடங்களுக்கு சேவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.