மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியடைந்தது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியடைந்தது. அதன் பின்னர், பாஜக கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். பாஜக கூட்டணி 228 இடங்களில் முன்னிலையில் இருப்பதையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது. அங்கு, அடுத்த முதல்வர் யார் மற்றும் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.