இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியேற்றி உள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூபாய் 6986 கோடி பெற்று முதல் இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 2019 20ம் ஆண்டில் பாஜகவிற்கு ரூபாய் 2555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. அதன்படி தேர்தல் பத்திரம் மூலம் வந்த தொகையில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பாஜகவிற்கு மட்டுமே சென்றுள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1397 கோடியும், காங்கிரஸ் கட்சி 1134.35 கோடியும், சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி ரூபாய் 1322 கோடி நிதியும் பெற்றுள்ளது. இதில் தமிழ்நாட்டில் திமுக ரூபாய் 656 கோடியும், அதிமுக ரூபாய் 6.05 கோடியும் நன்கொடை பெற்றுள்ளது.