அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மோசமான பனிப்புயலை எதிர்கொண்டு வருகிறது.
இந்த புயல் தற்போது கனடாவின் கிழக்கு பகுதியிலும் மையம் கொண்டிருந்தாலும் கூட, கடுமையான காற்று, பனியுடன் அமெரிக்க மாகாணங்களை தொடர்ந்து தாக்கி வருவதாக அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பனிப்புயல் காரணமாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பல லட்சம் மக்கள் கிறிஸ்துமஸ் இரவில் மின்சாரம் இன்றி பரிதவிப்புக்கு ஆளாகினர். இதனிடையே சாலை விபத்துகள் உள்பட பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அந்த வகையில் ஓஹியோ மாகாணத்தில் 12 பேர் பனிப்புயலால் பலியனாதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் பனிப்புயலால் அமெரிக்கா முழுவதும் மேலும் பலர் உயிரிழந்ததாகவும், இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஓக்லஹோமா, கென்டக்கி, மிசோரி, டென்னசி, விஸ்கான்சின், கன்சாஸ், நெப்ராஸ்கா, ஓஹியோ, நியூயார்க், கொலராடோ மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.














