செயற்கையாக, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். குறிப்பாக, ஸ்டெம் செல்களில் இருந்து ரத்த அணுக்களை எடுத்து, அவற்றை மனிதர்களின் உடலுக்குள் செலுத்தி, பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 5 முதல் 10 மில்லி லிட்டர் அளவில் செயற்கை ரத்தம் செலுத்தப்பட்டது. இதனால், நோயாளிக்கு எந்த வித பாதிப்பும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்த ஆராய்ச்சியின் முதல் படி வெற்றி அடைந்துள்ளது. அடுத்த கட்ட ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்.
செயற்கையான ரத்தத்தை தயாரிப்பது மருத்துவ துறையில் மிகவும் முக்கியமான மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆராய்ச்சி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆராய்ச்சி முழுமையாக வெற்றி அடையும் பட்சத்தில், நீண்ட கால அடிப்படையில் ரத்த மாற்றம் தேவைப்படும் நோயாளிகளுக்கு செயற்கை ரத்தம் பயனுள்ளதாக இருக்கும்.