பலாத்கார வழக்கில் டிரம்புக்கு மன்ஹாட்டன் நீதிமன்றம் ரூ.42 கோடி அபராதம் விதித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். ஆனால், அவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1996-ம் ஆண்டு, நியூயார்க் நகரில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், டிரம்ப் பெண் எழுத்தாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என கூறப்பட்டது. டிரம்ப் அவதூறு மற்றும் […]

பலாத்கார வழக்கில் டிரம்புக்கு மன்ஹாட்டன் நீதிமன்றம் ரூ.42 கோடி அபராதம் விதித்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். ஆனால், அவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1996-ம் ஆண்டு, நியூயார்க் நகரில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், டிரம்ப் பெண் எழுத்தாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என கூறப்பட்டது. டிரம்ப் அவதூறு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து மன்ஹாட்டன் நீதிமன்றம் ரூ.42 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து டிரம்ப் மேல் முறையீடு செய்தார். பெடரல் கோர்ட் அதை உறுதி செய்தது. இதனால், அவர் அதிபராக பதவி ஏற்கும் நேரத்தில் இது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu