கருக்கலைப்பு செய்வதற்கு வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 32 அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்குவது மற்றும் அது குறித்து முடிவு எடுக்க தனித்தனியாக வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மதுரை ராஜாஜி மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளும் அடங்கும். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த வாரியமானது கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட சட்டத்தின் கீழ் அமைக்கப்படும். மேலும் கருக்கலைப்பிற்கான கருத்துக்களை 3 நாட்களுக்குள் வாரியம் வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. காரணங்கள் சரியாக இல்லாவிட்டால் கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்கவும் இந்த வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட உள்ளது.