மும்பை கடற்கரையில் படகு விபத்து காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கடற்கரையில் நடந்த படகு விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பந்தப்பட்ட கடற்படையின் விரைவுப் படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே நடந்தது. எலிஃபெண்டா தீவுகளில் இருந்து 110 பயணிகளை ஏற்றிச் சென்ற வேகப் படகு, கடலில் என்ஜின் சோதனையின் போது கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியது. இதில் 12 பொதுமக்கள் மற்றும் 1 கடற்படை அதிகாரி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 99 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக, உயிர் பிழைத்த நபரின் புகாரின் அடிப்படையில், கொலாபா போலீசார் கடற்படை படகின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.