ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேர் பலியாகி உள்ளனர்.
காம்பியா மற்றும் செனகல் நாடுகளிலிருந்து அந்த படகு 170 பேரை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு விபத்துக்கு உள்ளானது. அட்லாண்டிக் கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மீன்பிடி படகில் இருந்து 89 உடல்களை மாரிடேனியா கடலோர காவல் படையினர் மீட்டனர். அந்த படைப்பில் இருந்து ஐந்து வயது சிறுமி உட்பட ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த படையில் இருந்த 72 பேர் மாயமாகியுள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அட்லாண்டிக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் படகு விபத்து இது என்று கூறப்பட்டுள்ளது.