பொலிவியா இஸ்ரேலுடனான தூதரக தொடர்பை துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலுடனான தூதரக உறவை பொலிவியா நாடு துண்டித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு தகவல் முகமை கூறியதாவது, பாலஸ்தீன மக்களுக்கு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலுடனான தூதரக உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பொலிவியா மனிதாபிமான உதவிகளை அனுப்ப தயாராக உள்ளது. அதோடு ஐநாவுக்கான பொலிவியா பிரதிநிதி டியாகோபாரி ஐநாவில் பேசும்போது, பொலிவியா அரசும், மக்களும் இஸ்ரேல் அரசுடன் தூதரக உறவுகளை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர். சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்காத நாடாக இஸ்ரேலை நாங்கள் கருதுகிறோம் என்றார்.
இதற்கிடையே சிலி, கொலம்பியா போன்ற நாடுகளும் இஸ்ரேலுக்கான தூதர்களை திரும்ப அழைத்துள்ளன. இது தொடர்பாக சிலி வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, காசா பகுதியில் இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களை நடத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு இஸ்ரேலுக்கான சிலித்தூதர் கர்வாசலை திரும்ப அழைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறியது.