மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நகருக்கு புறப்பட்ட ஏர்-இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக டெல்லிக்கு திருப்பப்பட்டது. தரையில் இறங்கிய பிறகு, வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏறி சோதனை நடத்தினார்கள், ஆனால் எந்தவொரு வெடிகுண்டும் இல்லை என்பது உறுதியாகியது.