டெல்லி உள்துறை அமைச்சகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
டெல்லியில் நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி நார்த் ப்ளாக்கில் வெடிகுண்டு வெடிக்கும் என மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது