மங்களூர் விமான நிலையத்திற்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவிமான நிலையத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் விமானத்தில் மற்றும் விமான நிலையத்தில் உள்ளே சில வெடிபொருட்கள் உள்ளது. அவை சில மணி நேரங்களில் வெடித்து விடும். நான் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன். நாங்கள் பன்னிங் என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக போலீசாரிக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக் போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர். விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்ற பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














