மும்பையில் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்தா தாஸ் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம்,ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலமாக இந்த மிரட்டல் வந்துள்ளது. இதேபோன்று மும்பையில் உள்ள 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் போலீசார் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.இருப்பினும் விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.