நாடு முழுவதும் 30 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மருத்துவமனைகளுக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். ஓசூர் மாருதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நடத்திய சோதனையில் நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோன்று நாடு முழுவதும் 30 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.