கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்திருந்த இந்திய பங்குச் சந்தை, தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வை கண்டது.
கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்திருந்த இந்திய பங்குச் சந்தை, தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வை கண்டது. சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 740.30 புள்ளிகள் உயர்ந்து 73,730.23 புள்ளிகளில் முடிந்தது. இன்று மேலும் 610 புள்ளிகள் உயர்ந்து 74,340.09 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதேபோல், நிஃப்டி நேற்றும், இன்றும் உயர்வை சந்தித்துள்ளது. நேற்று 254.65 புள்ளிகள் உயர்ந்து 22,337.30 புள்ளிகளில் முடிந்தது. இன்று 207.40 புள்ளிகள் உயர்ந்து 22,544.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.
ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், அதானி Ports & SEZ, TCS, பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவன பங்குகள் உயர்வை கண்டன. டெக் மகிந்திரா, கோடக் மகிந்திரா வங்கி, சொமேட்டோ, டாடா மோட்டார்ஸ், இந்துஸ்இந்த் வங்கி போன்ற பங்குகள் குறைவை சந்தித்தன.














