தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு கருணைத்தொகை மற்றும் போனஸ் 20 சதவிகிதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வரும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணை தொகை 11.67% என 20% போனஸ் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவை தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 3000 கருணை தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 49,023 பணியாளர்களுக்கு ரூபாய் 29 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.