செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக, நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற நகரும் ரோபோ ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, இந்த கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தில் புத்தகம் போன்ற அமைப்புள்ள பாறை ஒன்றை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்தப் பாறை மூலம், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆராய்ச்சிகள் அடுத்த கட்டத்திற்கு செல்வதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
புத்தகம் போன்ற வடிவில் உள்ள பாறைக்கு டெர்ரா ஃபிர்மே (Terra Firme) என்ற பெயரிடப்பட்டுள்ளது. காற்றில் புத்தகத்தின் பக்கங்கள் திருப்பப்படுவது போல இந்த பாறை உள்ளது. வெறும் 2.5 சென்டிமீட்டர் அளவிற்கு உள்ள இந்தப் பாறை, செவ்வாய் கிரகத்தில் இருந்த நீரோட்டம் மற்றும் புழுதி புயல் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக, தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.