வரும் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து இந்த நிகழ்வை காண்பதற்கான பார்வையாளர் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
ராக்கெட் ஏவும் நிகழ்வை நேரில் காண விரும்புபவர்கள், இன்று முன்பதிவு செய்யலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இன்று மாலை 6.30 வரை இஸ்ரோ இணையதள பக்கத்தில் இதற்கான முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு நிகழ்வை நேரில் பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.