போஸ்னியா பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
போஸ்னியாவின் மேற்கு பகுதியில் சன்ஸ்கி மோஸ்ட் என்னும் நகர் உள்ளது. இங்கு உள்ள பள்ளி ஒன்றில் மெஹமத் உக்காலிக் என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. எனினும் தேர்வுகள் எழுதுவதற்காக சில மாணவர்கள் மட்டும் வந்திருந்தனர். இந்நிலையில் உகாலிக் தன்னுடைய துப்பாக்கியால் பள்ளியின் செயலாளர், டீன் மற்றும் ஆங்கில ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொலை செய்துள்ளார். அதோடு தன்னையும் அவர் சுட்டுள்ளார். அவருக்கு நெஞ்சில் காயம் பட்டுள்ளது. அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து காவல்துறை இயக்குனர் அமெல் கூறுகையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார். இந்த சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.