பிரஜ்வல் ரோவண்ணா கைது

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான வழக்கில் பிரஜ்வல் ரோவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் எம். பி பிரஜ்வல் ரோவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்தவர். இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்த புகாரின் அடிப்படையில் இவர் மீது நான்கு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் வெளிநாட்டிற்கு […]

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான வழக்கில் பிரஜ்வல் ரோவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் எம். பி பிரஜ்வல் ரோவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்தவர். இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்த புகாரின் அடிப்படையில் இவர் மீது நான்கு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. இந்நிலையில் ஜெர்மனியில் இருந்த பிரஜ்வல் ரோவண்ணாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டு அனுப்பியது. அதேபோல் அவரை கைது செய்ய சிறப்பு கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்தது. மேலும் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என கடந்த 27ஆம் தேதி பிரஜ்வல் ரோவண்ணா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி இருந்தார். இதனை அடுத்து விமான நிலையத்தில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது .அதன்படி இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தடைந்தார். அப்போது அவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu