பிரேசிலில் கனமழை காரணமாக ஏற்பட்ட புயலில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர்.
தென் அட்லாண்டிக் பெருங்கடலில் காற்றழுத்து தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்தது. அது மேலும் புயலாக வலுப்பெற்றது. இது தென் அமெரிக்கா நாடான பிரேசிலை நோக்கி சென்றது. இதனால் அந்த நாட்டின் தென் மாகாணங்கள் கிராண்டு மற்றும் சாண்டா கத்தரினா ஆகியவற்றின் கடற்கரை பகுதியில் கனமழை பெய்தது. பின்னர் இது தீவிர புயலாக மாறியது. அப்போது தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது குடியிருப்பு பகுதியில் சென்றது.
இந்த புயலால் 65க்கும் மேற்பட்ட நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். அந்நாட்டின் இராணுவம் பேரிடர் மீட்பு துறையினருடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. மீட்பு பணியின் போது ஒரு வீட்டில் 15 உடல்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் மழை அதிகரிக்க கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இதனால் அந்த நாட்டு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிவாரண பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.