இஸ்ரேலுக்கான தூதரை பிரேசில் நாடு திரும்பப் பெற்றது.
பிரேசில் அதிபர் லூயிஸ் லூலா டிசல்வா இஸ்ரேலுக்கான தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைத்துள்ளார்.
இஸ்ரேல், பிரேசில் இடையே பல மாதங்களாக காசா போர் காரணமாக கருத்து வேறுபாடு மற்றும் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், காசா மீதான குண்டு வீச்சை நாஜிகளின் யூதப்படுகொலையுடன் லூயிஸ் ஒப்பிட்டு பேசினார். இதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேலில் உள்ள பிரேசில் நாட்டு தூதர் பிரெட்ரிகோ மேயரை அழைத்து இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்தது. இதை அடுத்து பிரேசில் தனது தூதரை திரும்ப அழைத்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் அரசு கூறுகையில், காசா மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தற்போது வரை அதில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதாலும் தூதரை திரும்பப் பெற்றுள்ளதாக கூறுகிறது.