கொரொனா வைரஸுக்கு எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 89,894,125 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 74,183 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 1,044,455 பேர் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 85,487,840 பேர் குணமடைந்து சென்றுவிட்டனர். இந்தியாவைப் பொறுத்தவரை வைரஸின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பைக் குறைக்கத் தடுப்பூசி பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இ௫ப்பினும் நேற்று ஒரே நாளில் மட்டும் 21,075 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 525,270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சில தினங்களாகவே தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. அதேபோல்
வைரஸ் பாதிப்பில் உலகில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா 2 இடத்தில் நீடித்து வருகிறது. 3வதாக, பிரேசில் நாடு இ௫ந்து வருகின்றது. இந்த நாட்டில் 32,687,680 பேர் இதுவரை வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். 76,850 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பிரேசிலில் இதுவரை 672,829 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிலும் 335 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர். மேலும் 31,077,538 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.